திருச்சி பிரபல தொழிலதிபரும், சமூக சேவகரும், பத்திரிகையாளருமான வி.எல்.நாகராஜ் முதலாம் ஆண்டு ஐயப்ப சாமிகளுக்காக மிக பிரமாண்டமான முறையில் மாபெரும் அன்னதானம் வழங்க உள்ளார்.
வரும் 29 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று மதியம் ஒரு மணி அளவில் உய்யக்கொண்டான் திருமலையில் உள்ள தனது V.ட வித்யா மஹாலில் திருச்சி சுந்தர் குருசாமி வழங்கும் குரு பிரியா குழுவினரின் மாபெரும் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தொடர்ந்து முதலாம் ஆண்டு ஐயப்ப சாமிகளுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டு அனைவரும் ஐயப்பன் அருள் பெற வருக வருக என அன்புடன் அழைத்துள்ளார் வி.எல். நாகராஜ்.

