Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தீராத வயிற்று வலியால் மின்விசிறியில் தூக்கு போட்டு முதியவர் தற்கொலை

0

'- Advertisement -

திருச்சி மேல சிந்தாமணியில் தீராத வயிற்று வலியால் மின்விசிறியில் தூக்கு போட்டு முதியவர் தற்கொலை

உடலை கைப்பற்றி கோட்டை போலீசார் விசாரணை

திருச்சி மேல சிந்தாமணி மாதுளங்கொல்லை தெரு பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். (வயது 69) இவருக்கு தீராத வயிற்று வலி மற்றும் கிட்னி பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் மன அழுத்தத்தில் தங்கவேல் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .

இது குறித்து அவரது மனைவி லட்சுமி கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் கோட்டை காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமாரவேல் தலைமையிலான போலீசார் தங்கவேலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்றொரு சம்பவத்தில் திருச்சி பாலக்கரை கெம்ஸ்டவுண் அடைக்கல மாதா கோவில் தெருவை சேர்ந்த விஜய சங்கர் (வயது 52) என்பவர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார் .இது குறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.