Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது.

0

'- Advertisement -

திருச்சியில் தமிழக அரசு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது.

 

திருச்சி பாலக்கரை,அரசு மருத்துவமனை பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்பதாக அந்தந்த கோட்டத்துக்கு உட்பட்ட காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது.தகவலின் பேரில் நேற்று முன்தினம் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது பாலக்கரை ஆலம் தெரு அருகே புகையிலை விற்ற கரூர் மாவட்டம் குளித்தலை கீழ சுக்காம்பட்டி பகுதியை சேர்ந்த பிரபாகரன் (வயது27 ), மற்றும் பாலக்கரை காஜா பேட்டை பொது கழிவறை அருகே புகையிலை விற்ற நாகமங்கலம் ஆலம்பட்டி ரோடு பகுதியை சேர்ந்த பிரேம்குமார் (வயது24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

 

இதுபோன்று திருச்சி அரசு மருத்துவமனை அருகே புகையிலை விற்ற புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியை சேர்ந்த விஜயகுமார் (வயது25) என்பவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த ஓரு கிலோ 220 கிராம் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை ஜாமினில் விடுவித்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.