மெய்மறக்கச் செய்யும் ‘உறக்க அனுபவ மையங்களாக’ திருச்சி தில்லை நகர் மற்றும் திருவெறும்பூரில் பெப்ஸ் ஷோரூம் .
திருச்சியில் இரண்டு புதிய ‘கிரேட் ஸ்லீப் ஸ்டோர்’ ஷோரூம்களைத் தொடங்கியிருக்கும் பெப்ஸ்.
தில்லை நகர் மற்றும் திருவெறும்பூரில் அமைந்துள்ள இந்த ஷோரூம்கள் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த நேரடி அனுபவத்தை வழங்கும்.
ஒவ்வொரு ஷோரூமும் 1300 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்பிரிங் மேட்ரஸ் மற்றும் உறக்கத் தீர்வுகளை வழங்குவதில் இந்தியாவின் முன்னணி பிராண்டான பெப்ஸ் இண்டஸ்ட்ரீஸ், தமிழ்நாட்டில் தனது செயலிருப்பை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. மாநிலத்தின் மையப்பகுதியான திருச்சிராப்பள்ளியில், தில்லை நகர் பத்தாவது கிராஸ் (மேற்கு விரிவு) மற்றும் திருவெறும்பூர் ஆகிய இரண்டு முக்கிய இடங்களில் தனது புதிய, பிரத்யேக ‘கிரேட் ஸ்லீப் ஸ்டோர்களை’ பெப்ஸ் இன்று தொடங்கியுள்ளது.
வாடிக்கையாளர்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே உலகத்தரம் வாய்ந்த, புதுமையான மெத்தைகள், தலையணைகள் மற்றும் உறக்கத்திற்குத் தேவையான அனைத்துத் தீர்வுகளையும் கிடைக்கச் செய்வதே பெப்ஸ் நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த புதிய விற்பனையகங்களின் திறப்பு விழா அந்த இலக்கை நோக்கிய ஒரு முக்கிய மைல்கல்லாகும்.
பெப்ஸ் இண்டஸ்ட்ரீஸின் நிர்வாக இயக்குநர் ஜி. சங்கர் ராம் இந்த இரண்டு புதிய ஷோரூம்களையும் திறந்து வைத்தார். மெய்மறக்கச் செய்யும் ‘உறக்க அனுபவ மையங்களாக’ வாடிக்கையாளர்களின் வசதிக்காக இந்த ஷோரூம்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள், இங்கு பெப்ஸ் பிராண்டின் அனைத்துத் தயாரிப்புகளையும் நேரில் பார்த்து, தொட்டு உணர்ந்து, தங்களுக்குத் தேவையானதைத் தேர்வு செய்யலாம்.
இங்கு ஸ்பிரிங், ஃபோம் மற்றும் காயர் மெத்தைகள், பிரீமியம் தலையணைகள், மெத்தை பாதுகாப்பு உறைகள் மற்றும் படுக்கையறை சார்ந்த இதர பொருட்கள் நேர்த்தியாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
வாடிக்கையாளர்களின் சௌகரியம் மற்றும் நவீன வாழ்க்கை முறையைக் கருத்தில் கொண்டு, பெப்ஸ் கம்ஃபர்ட், பெப்ஸ் சுப்ரீம், பெப்ஸ் ரெஸ்டோனிக் மெமரி ஃபோம், பெப்ஸ் சுபீரியர் ஸ்பிரிங் என்ற பெயர்களில் நான்கு மேம்படுத்தப்பட்ட தயாரிப்புத் தொகுப்புகளை பெப்ஸ் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது; இவை ஒவ்வொன்றும் மிகச்சிறந்த உடல் ஆதரவு, சொகுசு மற்றும் நீண்ட நாட்கள் உழைக்கும் தன்மையுடன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
திறப்பு விழாவில் பேசிய ஜி. சங்கர் ராம் கூறியதாவது: “புதுமையான தொழில்நுட்பம் மற்றும் நேர்த்தியான வடிவமைப்பு மூலம் இந்தியர்களுக்குச் சிறந்த உறக்கத்தை வழங்குவதே பெப்ஸ் நிறுவனத்தின் தாரக மந்திரம். திருச்சியில் திறக்கப்பட்டுள்ள இந்த புதிய ‘கிரேட் ஸ்லீப் ஸ்டோர்கள்’ மூலம், தமிழ்நாட்டில் இன்னும் பல குடும்பங்களுக்கு உலகத் தரமான உறக்க அனுபவத்தை நாங்கள் கொண்டு சேர்க்கிறோம். தமிழ்நாடு எங்களின் மிக முக்கியமான சந்தைகளில் ஒன்று. இங்குள்ள வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த வசதியையும் தரமான சேவையையும் வழங்குவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.”
சுமார் 1300 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஒவ்வொரு ஷோரூமும், வாடிக்கையாளர்கள் பெப்ஸ் தயாரிப்புகளை ஒப்பிட்டுப் பார்த்து, தங்களது தேவைகளுக்கு உகந்தவற்றை தேர்ந்தெடுக்க சரியான முடிவை எடுக்க உதவும் வகையில் ஓர் ‘இன்டராக்டிவ்’ சூழலை வழங்குகிறது.
தற்போது இந்தியா முழுவதும் 5,000-க்கும் மேற்பட்ட மல்டி-பிராண்டு விற்பனையகங்கள் மற்றும் 90 பிரத்யேக ஸ்டோர்கள் மூலம் பெப்ஸ் தனது சேவையை வழங்கி வருகிறது. 2026-ஆம் ஆண்டிற்குள் முக்கிய நகரங்கள் மற்றும் வளர்ந்து வரும் சிறுநகரங்களிலும் தனது பிரத்யேக ‘கிரேட் ஸ்லீப் ஸ்டோர்’ கிளைகளை விரிவுபடுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பெப்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் பற்றி:
கோயம்புத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பெப்ஸ், இந்தியாவின் வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களிலும் உற்பத்தி பிரிவுகளை கொண்டுள்ளது. கோவையில் 11 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இதன் பிரம்மாண்டமான தொழிற்சாலை, 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட நிபுணர்களால் நிர்வகிக்கப்படுகிறது. பெப்ஸ் தயாரிப்புகளில் ‘மார்வெலஸ் மிடில் ஸ்பைன் கார்டு’, ‘ஜீரோ டிஸ்டர்பன்ஸ்’ போன்ற காப்புரிமை பெற்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. விஸ்கோ எலாஸ்டிக் ஃபோம் உடன் கூடிய ‘ஸ்பைன் கார்டு’ இந்தியாவின் முதல் இன்னர்ஸ்பிரிங் மெத்தை என்ற பெருமைக்குரியது. எனக் கூறினார் .

