Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் எஸ்.ஏ.பி. டிரேடஸ் ஓ ஜெனரல் ஏ.சி. நிறுவனத்தின் ஷோரூமை கோவிந்தராஜுலு தொடங்கி வைத்தார் .

0

'- Advertisement -

திருச்சியில் எஸ்.ஏ.பி. டிரேடஸ் ஓ ஜெனரல் ஏ.சி. நிறுவனத்தின் ஷோரூம்

 

 

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் வி.கோவிந்தராஜூலு திறந்து வைத்தார்.

 

திருச்சி கோட்டை ரெயில் நிலைய சாலையில் மாரீஸ் திரையரங்கம் அருகே எஸ்.ஏ.பி. டிரேடஸ் ஓ ஜெனரல் ஏ.சி. நிறுவனத்தின் பிரத்யேக ஷோரூம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. திறப்பு விழாவுக்கு ஓ ஜெனரல் ஏ.சி நிறுவனத்தின் இயக்குனர்(விற்பனை) பூவையா தலைமை தாங்கினார்.

 

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் வி.கோவிந்தராஜூலு கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். எஸ்.ஏ.பி. டிரேடஸ் உரிமையாளர் தீபக்ராஜா அனைவரையும் வரவேற்று பேசினார் .

 

இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில்

தொழிலதிபர் ஆர் வி ராம் பிரபு,

ராக்போர்ட் டைம்ஸ் செய்தி ஆசிரியர் லட்சுமி நாராயணன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின்

மண்டல தலைவர் தமிழ்செல்வம், மாவட்ட தலைவர் ஸ்ரீதர், மாநகர தலைவர் எஸ்.ஆர்.வி.கண்ணன், செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் ஜானகிராமன்,

மாநில இணை செயலாளர்கள் திருப்பதி, அம்பாள்ராமு, துணைதலைவர் தில்லைமனோகர், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிரசன்னா, மாநகர தலைவர் கே.எம்.எஸ்.மைதீன், செயலாளர்கள் திருமாவளவன், அப்பாத்துரை உள்ளிட்ட தொழிலதிபர்கள், பலர் கலந்துகொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.