Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வரும் ஞாயிற்றுக்கிழமை முத்தமிழ் சிலம்ப டிரஸ்ட் மற்றும் திருச்சி மாவட்ட சிலம்பாட்ட கழகம் ஆகியவை இணைந்து நடத்தும் ‘சிலம்ப போட்டியினை அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைக்கிறார் .

0

'- Advertisement -

திருச்சியில் முத்தமிழ் சிலம்ப டிரஸ்ட் மற்றும் திருச்சி மாவட்ட சிலம்பாட்ட கழகம் ஆகியவை இணைந்து ‘சிலம்பம் சமர்-2025’ போட்டிகளை திருச்சியில் வரும் 23ம் தேதி நடத்துகின்றன.

 

முத்தமிழ் சிலம்ப டிரஸ்ட் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட சிலம்பாட்ட கழகம் இணைந்து நடத்தும் முதலாம் ஆண்டு ‘சிலம்பம் சமர்- 2025’ போட்டிகள் வருகிற 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7-45 மணி அளவில் திருச்சி உறையூர், மேட்டுத் தெரு போலீஸ் மைதானத்தில் நடக்கிறது.

 

சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் நீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண் நேரு, திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கதிரவன், திருச்சி மாவட்ட சிலம்பாட்ட கழக தலைவர் ஏ.பூர்ண புஷ்கலா ஆகியோர் பங்கேற்று சிறப்பிக்க உள்ளார்கள்.

 

மேலும், பாரதிய ஜனதா கட்சி திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் கே.கே. ஒண்டிமுத்து, தமிழர் தேசம் கட்சி நிறுவனத் தலைவர் கே.கே.செல்வகுமார், திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட், இணை செயலாளர் வழக்கறிஞர் பி. விஜய் நாகராஜன், பொருளாளர் வழக்கறிஞர் எஸ்.ஆர்.கிஷோர் குமார் மற்றும் பலர் தலைமை மற்றும் முன்னிலை வகிக்கின்றனர்.

 

போட்டியில் மதுரை, சிவகங்கை, கோவை, செங்கல்பட்டு, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிலம்ப வீரர்- வீராங்கனைகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்துகின்றனர். குறிப்பாக 30 ‘டீம்’ தனித்திறன் போட்டியிலும், 10 ‘டீம்’ குழு போட்டிகளிலும், பங்கேற்கின்றனர்.

 

இதற்கான ஏற்பாடுகளை முத்தமிழ் சிலம்ப டிரஸ்ட் தலைவர் பி.சரவணன், செயலாளர் ஏ.நாகவேல் மற்றும் பலர் செய்து வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.