திருச்சி பெல் குடியிருப்பில் 55 வயது தலைமை ஆசிரியரை அழைத்து உல்லாசமாக இருந்த 34 வயது ஆசிரியை கணவனிடம் சிக்கினார் .
திருச்சி அருகே பெல் குடியிருப்பில் ஆசிரியையுடன் தலைமை ஆசிரியர் உல்லாசமாக இருந்தபோது அவரது கணவன் வீட்டிற்கு பூட்டு போட்டு சிக்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி திருவரம்பூர் அருகே பெல் நிறுவன குடியிருப்பு வளாகத்தில் 10க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. திருப்பராய்த்துறை தபோவனம் கட்டுப்பாட்டில் அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்குகிறது. இப்பள்ளியின் 55வயதான தலைமை ஆசிரியருக்கும், அதே பள்ளியில் பணிபுரியும் 34வயதான கணித ஆசிரியைக்கும் தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆசிரியையின் கணவர் பெல் தொழிற்சாலையில் பணிபுரிகிறார்.
இந்நிலையில் கடந்த 17ம்தேதி கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் தலைமை ஆசிரியரை பெல் குடியிருப்பில் உள்ள தனது வீட்டுக்கு உல்லாசமாக இருக்க ஆசிரியை அழைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தலைமை ஆசிரியர் ஆசிரியை வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது திடீரென வீட்டுக்கு வந்த கணவர், இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இருவரும் உல்லாசமாக இருந்த அறையை வெளிப்பக்கமாக பூட்டு போட்டு பூட்டிய ஆசிரியையின் கணவர், அருகில் உள்ள சகஊழியர்களிடம் இது குறித்து தெரிவித்து உள்ளார். அங்கு வந்த சக ஊழியர்கள், தலைமை ஆசிரியரை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக பெல் நிர்வாகத்திடம் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் தலைமை ஆசிரியரை உடனடியாக பணியில் இருந்து நீக்க பெல் தரப்பில் பள்ளி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, கட்டாய விருப்ப ஓய்வில் செல்வதாக சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியரிடம் பள்ளி நிர்வாகம் சார்பில் எழுதி வாங்கப்பட்டு அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
மேலும் பெல் ஊழியர்களுக்கான குடியிருப்பில் வசித்து வந்த தலைமை ஆசிரியரை, அந்த வீட்டையும் காலி செய்யும்படி பெல் நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டது. அதன்படி தலைமை ஆசிரியர் வீட்டை காலி செய்து விட்டு சென்று உள்ளார்.