Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் 50-வது நாளாக தொடரும் அரசு போக்குவரத்து ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம்.

0

'- Advertisement -

திருச்சியில் 50-வது நாளாக தொடரும் அரசு போக்குவரத்து ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம்.

 

1.4.2003 -க்கு பின் பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

23 மாதகால ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.

ஓய்வூதியர்களுக்கு பணியில் உள்ள தொழிலாளர்கள் பெரும் அகவிலைப்படி மருத்துவக்காப்பீடு ஒப்பந்த அடிப்படையில் ஓய்வூதிய உயர்வு, குறைந்தபட்ச ஓய்வூதியம் உயர்வு வழங்க வேண்டும்.

தேர்தல் வாக்குறுதிபடி அனைவருக்கும் பழைய பென்ஷன் வழங்க வேண்டும். உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு கல்வி தகுதி அடிப்படையில் வாரிசு வேலை வழங்க வேண்டும்.

என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன

திருச்சி – கரூர் மண்டலங்கள்

சார்பில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருச்சி புறநகர் கிளை முன்

தொடர் காத்திருப்பு

போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

50வது நாளாக இன்று திங்கட்கிழமை நடந்த போராட்டத்திற்கு

டி.என்.எஸ்.டி.சி திருச்சி -கரூர் மண்டல துணைத்தலைவர்

நீலமேகம் தலைமை தாங்கினார்.

 

சிபிஎம் மாநில கட்டுப்பாட்டுக்குழு தலைவர் எஸ்.ஸ்ரீதர் துவக்க உரையாற்றினார்.

போராட்டத்தை விளக்கி டி.என்.எஸ்.டி. சி திருச்சி,கரூர்

மண்டல தலைவர் சிங்கராயர்,

மண்டல பொதுச்செயலாளர் மாணிக்கம், பொருளாளர் முத்துக்குமார்,

எஸ்.சி.டி.சி மாநில தலைவர் அருள்தாஸ்,

எஸ்.சி.டி.சி ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகிகள் ராமதாஸ், சண்முகம், டி.என்.எஸ்.டி.சி ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகிகள் கருணாநிதி, சிவானந்தம்

ஆகியோர் பேசினர். இந்த காத்திருப்பு போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.