Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அரியமங்கலத்தில் 3 வயது பெண் குழந்தையை ரூ.50 ஆயிரத்துக்கு விற்ற தந்தை உள்ளிட்ட 4 பேர் கைது .

0

'- Advertisement -

திருச்சியில் 3 வயது பெண் குழந்தையை விற்பனை செய்த தந்தை உள்பட 4 பேரை போலீஸாா் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர் .

 

திருச்சி அரியமங்கலத்தைச் சோ்ந்தவா் ரவிகுமாா். இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த பெண்ணுக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. ரவிகுமாா் வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளாா். இவரது மனைவி கட்டட வேலைக்குச் சென்று வருகிறாா்.

 

இந்நிலையில், கடந்த 14-ஆம் தேதி தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, தனது 3 வயது மகளை வெளியே தூக்கிச் சென்ற ரவிகுமாா், உறவினா் வீட்டில் விட்டுள்ளதாகவும், நாம் இருவரும் சமாதானம் ஆனபிறகு குழந்தையை வீட்டுக்கு அழைத்து வருவதாகவும் மனைவியிடம் தெரிவித்துள்ளாா்.

 

ஆனால், நேற்று செவ்வாய்க்கிழமை காலை வரை குழந்தையை வீட்டுக்கு அழைத்து வரவில்லை. இதுகுறித்து அவரது மனைவி கேட்டபோது உறவினா் வீட்டில் விட்டுள்ளதாக மீண்டும் தெரிவித்துள்ளாா்.

 

இதுகுறித்து அரியமங்கலம் காவல் நிலையத்தில் ரவிகுமாரின் மனைவி நேற்று புகாா் செய்தாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ரவிகுமாரிடம் விசாரனை மேற்கொண்ட போது குழந்தையை அதே பகுதியைச் சோ்ந்த பூக்கடை சாகுல் என்பவரிடம் ஒப்படைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து சாகுலிடம் மேற்கொண்ட விசாரணையில், திருச்சி பாலக்கரை குட்செட் பகுதியைச் சோ்ந்த குழந்தை இல்லாத சுமை தொழிலாளி முருகன் – சண்முகவள்ளி தம்பதிக்கு ரூ.50 ஆயிரத்துக்கு குழந்தையை விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் ரூ.50 ஆயிரத்தில் ரூ.15 ஆயிரம் ரவிகுமாா் பெற்றதும் தெரியவந்தது.

 

இதையடுத்து குழந்தையை மீட்டு அவரது தாயிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.

 

மேலும், சட்டவிரோதமாக குழந்தையை விற்பனை செய்த குழந்தையின் தந்தை ரவிகுமாா், பூக்கடை சாகுல், குழந்தையை விலைக்கு வாங்கிய முருகன், சண்முகவள்ளி ஆகிய 4பேரை போலீஸாா் நேற்று செவ்வாய்க்கிழமை அரியமங்கலம் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.