திருச்சி கொள்ளிடம்
ஆற்றுப்பாலத்தில் அரசு பேருந்து
மோதி முதியவர் பரிதாப பலி
போக்குவரத்து போலீசார் விசாரணை.
திருச்சி உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 65). இவர் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் கொள்ளிடம் ஆற்று பாலத்தில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சந்திரசேகர் பலத்த காயமடைந்தார் .அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சந்திரசேகர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் திருவனந்தம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்