அரியமங்கலத்தில் தையல் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை போலீசார் விசாரணை .
திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் கே வி கே சாமி தெருவை சேர்ந்தவர் முகமது அக்பர் (வயது 58) இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர் .
இந்நிலையில் முதல் மனைவி இறந்ததை தொடர்ந்து இரண்டாவதாக
ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு முகமது அக்பர் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் சம்பத் என்ற அவர் தனது மகன் தவ்ஹீத் அகமது ( வயது 36) என்பவரிடம் செல்போனில் பேசி தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியுள்ளார் .
இந்த நிலையில் கடந்த நாலாம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முகமது அக்பர் திரை துணியால் தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து அரியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முகமது அக்பர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .
இந்த சம்பவம் குறித்து அரியமங்கலம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.