திருச்சியில் ரூ.55 ஆயிரத்துக்கு கறியை வாங்கிவிட்டு காசு கேட்ட கடைக்காரரை தாக்கிய பீப் பிரியாணி கடை உரிமையாளர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு
திருச்சியில்
இறைச்சிக்கு பணம் கேட்ட கடைக்காரருக்கு அடி உதை.
பிரியாணி கடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு.
திருச்சியில் இறைச்சிக்கு பணம் கேட்ட கறிக்கடைகாரை தாக்கியவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி சுப்ரமணியபுரம், ஜெய்லானியா தெருவை சேர்ந்தவர் அப்துல் நசீர் (வயது 32), அன்பில் நகர் ஜங்சன் அருகே மாட்டிறைச்சி கடை நடத்தி வருகிறார். அதே பகுதியில் ரசாக் மற்றும் முகமது ஆகியோர் மாட்டிறைச்சி பிரியாணி கடை தள்ளுவண்டி கடையில் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இவர்கள் ரூ.55 ஆயிரத்திற்கு மாட்டிறைச்சி வாங்கிவிட்டு அதற்கான தொகையை தராமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நசீர் இது குறித்து அவர்களது கடைக்கு சென்று கரைக்கு உரிய பணத்தை கேட்டபோது, அந்த இரண்டு பேரும் அவரை தகாத வார்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இது குறித்து ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.