Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அரியமங்கலத்தில் லாட்டரி வியாபாரி கைது. பரிசு தொகை தரும் பண முதலைகள் சிக்காதது ஏன் ?

0

'- Advertisement -

அரியமங்கலத்தில் லாட்டரி விற்றவர் பணத்துடன் கைது .

 

அரியமங்கலம் காவல் நிலைய போலீசார் விசாரணை.

 

 

திருச்சி அரியமங்கலம் சீனிவாச நகர் பொதுக்கழிப்பிடம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக ரகசிய தகவல் வந்துள்ளது . இதையடுத்து அரியமங்கலம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் அதிரடியாக ரோந்து சென்று கண்காணித்தனர் .அப்போது லாட்டரி சீட்டுகள் விற்றதாக அரியமங்கலம் சீனிவாசன் நகரை சேர்ந்த சக்திவேல்

(வயது 42) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து பணம் மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்றதற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

 

மேலும் திருச்சி மாநகர் முழுவதும் லாட்டரி சீட்டு வியாபாரி கைது செய்யப்பட்டு காவல்துறையினர் சிறப்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் இவர்கள் லாட்டரி சீட்டு நம்பர் எழுதுபவர்கள் தான் . இவர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு பகுதியில் பரிசுத்தொகை கொடுக்கும் பெரும் முதலாளிகள் அமைதியாக தினமும் பல லட்சம் சம்பாதித்து வருகிறார்கள் இவர்களின் மீது முறைப்படி காவல்துறையினர் விசாரணை செய்து கைது நடவடிக்கை எடுப்பார்களா என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.