திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தனியார் விடுதி குளியல் அறையில் பிணமாக கிடந்த பைனான்ஸ் ஊழியர் .
மணப்பாறை போலீசார் விசாரணை :
மணப்பாறையை அடுத்துள்ள மருங்காபுரி ஒன்றியம் தொட்டியப்பட்டி வடக்கு நாயக்கா்குளத்தைச் சோ்ந்தவா் வேலுச்சாமி மகன் சுப்பிரமணியன் (வயது 41).
இவா், ஹைதராபாத்தில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் கடந்த 10 ஆண்டுகளாக வேலை பாா்த்து வந்ததாகவும், கடந்த ஜூலை 5-ஆம் தேதி முதல் குடும்ப பிரச்னை காரணமாக மணப்பாறையில் உள்ள தனியாா் விடுதியில் தங்கியிருந்தாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை அவரது அறை நீண்ட நேரம் திறக்கப்படவில்லை அதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பூட்டியிருந்த விடுதி அறையை திறந்து சென்று பார்த்தபோது அங்கு குளியலறையில் சுப்பிரமணியன் பிணமாக கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த காவல் ஆய்வாளா் சீனிபாபு தலைமையிலான போலீஸாா், அங்குவந்து சடலத்தை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து உடற்கூறாய்வுக்குப் பின்னா் உறவினா்களிடம் ஒப்படைத்தனா். மணப்பாறை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .