Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நாளை 9ம் தேதி திருச்சிக்கு முதல்வர் வருகை. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் ரத்து என ஆணையர் அறிவிப்பு .

0

'- Advertisement -

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை 9ம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் உங்கள் பகுதியும் இருக்கா என்று செக் செய்து கொள்ளுங்கள். குடிதண்ணீரை நாளையே தேவையான அளவிற்கு சேகரித்து வைத்து கொள்ளுங்கள்.

 

இதுகுறித்து திருச்சி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

 

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம். வெல்-III மற்றும் பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் – II ஆகிய நீரேற்று நிலையத்திற்கு கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்திலிருந்து மின் சப்ளை வழங்கப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று செவ்வாய்க்கிழமை ( 08.07.2025) மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் வெல்- III மற்றும் பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் – II ஆகிய நீரேற்று நிலையத்திலிருந்து விறகுப்பேட்டை, மரக்கடை, மலைக்கோட்டை, சிந்தாமணி, உறையூர், பாத்திமா நகர், புத்தூர், மங்களம் நகர், செல்வா நகர், பாரதி நகர், சிவா நகர், ஆனந்தம் நகர், ரெயின்போ நகர், தில்லைநகர், அண்ணாநகர்.

 

கண்டோன்மென்ட், காஜாப்பேட்டை, ஜங்ஷன், கருமண்டபம், ராமலிங்க நகர், உய்யகொண்டான் திருமலை, விஸ்வாஸ் நகர், மிளகுபாறை, கல்லாங்காடு, சொசைட்டி காலனி, எம்.எம்.நகர் மற்றும் திருவெறும்பூர், வள்ளுவர் நகர், எல்லக்குடி, ஆலத்தூர், புகழ் நகர், காவேரி நகர், பாரி நகர், சந்தோஷ் நகர், கணேஷ் நகர், விவேகானந்தர் நகர், அம்பேத்கர் நகர் ஆகிய மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் வினியோகம் நாளை புதன்கிழமை 09.07.2025 ஒருநாள் மட்டும் இருக்காது.

 

மறுநாள் 10.07.2025 அன்று முதல் வழக்கம் போல் குடிநீர் வினியோகம் செய்யப்படும். எனவே, பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

எனவே மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் குடிநீர் தேவைக்கு ஏற்ப நாளையே சேகரித்து வைத்து கொள்ளுங்கள். ஒரு நாள் முழுவதும் குடிநீர் வராது.

 

இந்த நிலையில் நாளை தனியார் கல்லூரி விழாவில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திருச்சி வருகை புரிய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.