திருச்சிராப்பள்ளி நீதிமன்ற வளாகத்தில் உலக யோகா தினம் கொண்டாட்டம்.
உலக யோகா தினத்தை முன்னிட்டு மாண்புமிகு உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நேற்று (21/6/2025) சனிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி 7.40 மணி வரை திருச்சிராப்பள்ளி நீதிமன்ற வளாகத்தில் மாண்புமிகு மாவட்ட நீதிபதி M. கிறிஸ்டோபர் தலைமையில் உலக யோகா தினம் அனுசரிக்கப்பட்டது .
யோகா வகுப்பை யோகா பயிற்சியாளர் விஜயகுமார் நடத்தினார்.
நிகழ்ச்சியில் மாண்புமிகு நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்க தலைவர் கணேசன், செயலாளர் முத்துமாரி, துணைத் தலைவர் வடிவேல்சாமி, இணை செயலாளர் விக்னேஷ் அரசு வழக்கறிஞர் சவரிமுத்து,பெண் வழக்கறிஞர் சங்க செயலாளர் ஜெயந்தி ராணி, குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் ஆகியோர் கலந்து கொண்டனர்.