புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் தினத்தை முன்னிட்டு திருச்சி சில்வர் லைன் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் சார்பில் சந்திப்பு இன்று கூட்டம் நடைபெற்றது
புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் தினத்தை முன்னிட்டு திருச்சி சில்வர் லைன் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்
சார்பில் சந்திப்பு இன்று கூட்டம் நடைபெற்றது
மனிதனை மிகவும் அச்சுறுத்தக்கூடிய நோயில் ஒன்று புற்றுநோய் உயிர்க்கொல்லி நோய் என்றும், நோய்த்தாக்கிய நபர் சிகிச்சைக்கான காலத்தில் கடும் சித்திரவதைகளை அனுபவிக்க நேரிடும் என்பது போன்ற அச்சம் நிலவிய காலம் ஒன்றும் இருந்தது.
புற்றுநோய் சிகிச்சை முறையில் பல ஆண்டுகாலம் கடும் உழைப்பைச் செலுத்தி அர்ப்பணிப்புணர்வோடு பணியாற்றிய அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் பலரின் கூட்டுழைப்பும் அறிவியல் புரட்சியும் வியத்தகு மாற்றங்களை கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. புற்றுநோய் தாக்கத்திற்கு ஆளாகிவிட்டோமே என்ற நோயாளியின் மனக்கவலையும், அவரது குடும்பத்தாரின் போதுமான ஆதரவு இல்லாத சூழலும்தான் இன்னும் தீர்வு காண முடியாத சிக்கலாக நீடிக்கிறது.
மாறாக, மருத்துவத்துறையில் வெள்ளமென பாய்ச்சப்பட்ட புதிய கண்டுபிடிப்புகளும், துறைசார் மருத்துவர்களின் பங்களிப்புகளோடும் சிகிச்சை முறையில் பல மேம்பாடுகளை கண்டிருக்கிறது. மன தைரியத்துடன் தொடர் மருத்துவ சிகிச்சையை எடுத்துக்கொண்டால், வெற்றிகரமாக புற்றுநோயிலிருந்தும் மீண்டுவிடலாம் என்ற நிலையை எட்டியிருக்கிறோம்.
தமிழகத்தின் நகர்ப்புறம் ஒன்றின் நடுத்தர குடும்பப் பின்னணியிலிருந்து மருத்துவம் பயின்று; சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிய அனுபவத்தை பெற்று புற்றுநோய்க்கென்றே திருச்சியில் தனிச்சிறப்பான மருத்துவமனையாக சில்வர்லைன் புற்றுநோய் மையத்தை உருவாக்கி வழிநடத்தி வருகிறார். மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரும் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணரும் ஆலோசகருமான மருத்துவர் செந்தில்குமார் அவர்கள்.
மருத்துவர் செந்தில்குமார் மற்றும் அவரது மருத்துவக் குழுவினரின் தொடர் சிகிச்சைகளின் காரணமாக, கடந்த பத்தாண்டுகளில் பல நூறு பேர் புற்றுநோயிலிருந்து மீண்டிருக்கின்றனர். புதுவாழ்வை வாழத்தொடங்கியிருக்கின்றனர். முன்னரே சொன்னது போல, அவசியமற்ற “அச்சம்”தான் புற்றுநோயை எதிர்கொள்வதில் முதல் தடையாக அமைந்திருக்கிறது. அந்தத்தடையை தாண்டினால் மட்டுமே, முழுமையான தீர்வை வழங்கக்கூடிய தொடர் மருத்துவ சிகிச்சை முறைகள் கைக்கூடும்.

சில்வர்லைன் புற்றுநோய் மருத்துவமனையின் ஏற்பாட்டில், வருடந்தோறும் புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்கான வெற்றியாளர்கள் தினத்தை கொண்டாடி வருகிறோம். இந்நிகழ்வில், புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளாகி, சில்வர்லைன் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவக்குழுவினரின் தொடர் சிகிச்சை முறைகளால் எவ்வாறு மீண்டனர் என்பதை நம்பிக்கை தரும் நேருரையாகவே வழங்கி வந்திருக்கின்றனர்.
இந்த ஆண்டும் அதேபோல், இன்று ஜூன் 15 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதலாக திருச்சி இந்தியன் மெடிக்கல் அசோசியேசன் அரங்கில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராக கே. ரவீந்திரன், பொது மேலாளர், இந்திய கனிமின்சாரம் நிறுவனம்(பி.எச்.இ.எல்) பங்கேற்றார், மேலும், ஐ.எம்.ஏ.வின் முன்னாள் தேசிய துணைத்தலைவர் மருத்துவர் எம்.எஸ்.அஸ்ரஃப், டாக்டர் (சிஸ்டர்) பி. ராஜகுமாரி, முதல்வர், ஹோலி கிராஸ் கல்லூரி, திருச்சி, மற்றும் என்.எம்.கணேசன், இயக்குனர். அம்பிகா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மதுரை, ஆகியோர் பங்கேற்று கருத்துரை வழங்கினர்.
மேலும், சிறப்பு நிகழ்வாக விஜய் டிவி, சன் டிவி “கலக்கப்போவது யாரு புகழ்” மதுரை முத்து வழங்கிய சிரிப்பும் சிந்தனையும் அடங்கிய பல்சுவை நிகழ்ச்சியும் நடைபெற்றது,
சில்வர் லைன் கேன்சர் ஹெல்த் கேர் டிரஸ்டின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் செந்தில்குமார், அறக்கட்டளை உறுப்பினர்கள் என்.எம்.கணேசன் மருத்துவர் ஹேமலதா, மருத்துவர்கள் நரேந்திரன், சிவபிரகாஷ் ,ராகுல், சங்கர், ராமாமூர்த்தி ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின் நோக்கமாக அமைந்த அனுபவ பகிர்வில், திறம்வாய்ந்த சில்வர்லைன் மருத்துவக்குழுவின் சிகிச்சையினால் புத்தெழுச்சி பெற்ற கேன்சர் நோயாளிகள் பலரும் பங்கேற்று அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
கேன்சர் நோயின் கொடுமைக்கு ஆளாகி, அந்நோயிலிருந்து மீண்டுவர வழிதெறியாமல் உழலும் நோயாளிகளுக்கு மனவலிமையை வழங்கும் விதமாகவும் சில்வர்லைன் மருத்துவக் குழுவின் தொடர் மருத்துவ சிகிச்சை முறைகளால் புற்றுநோயிலிருந்து மீண்டு வருவதற்கான வழிகாட்டல் வழங்கும் நிகழ்வாகவும் நிகழ்ச்சி நடைபெற்றது,
முன்னதாக புற்றுநோய் குறித்த சந்தேகங்கள் பற்றி டாக்டர் செந்தில்குமார் மற்றும் டாக்டர் நரேந்திரன் ஆகியோர் பத்திரிகையாளர்கள் கேள்விகளுக்கு தெளிவான பதில் அளித்தனர் .