தனது பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என நினைத்து திருச்சி 57வது வார்டுக்கு மேயர் அன்பழகன் எதுவும் செய்வதில்லை . கவுன்சிலர் முத்துச்செல்வம்.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 57 வது வார்டு , எடமலைபட்டிபுதூர் அரசுகாலனி முதல் தெருவில் பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் ஒரு காலி மனை உள்ளது. அதில் புதர்கள் மண்டியும் முள்ளு காடாகவும் இருக்கிறது. இந்த இடத்தின் உரிமையாளர் யார் என்பது தெரியவில்லை அதனால் அங்கு முட்கள் மற்றும் குப்பைகளை சுத்தம் செய்யாமல் இருப்பதால் அக்கம் பக்கத்தில் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பாம்பு, விஷ பூச்சிகள் அதிக அளவில் தொந்தரவு தருகிறது.
இதை அந்த ஏரியா மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் மாநகராட்சி மேஸ்திரி இடம் கூறியும் எந்த பயனும் இல்லை.
கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இதே இடத்தில் இதே புகாரினை தொடர்ந்து அன்றைய மாநகராட்சி கமிஷனர் முஜிப்பூர் ரகுமானிடம் நாம் அளித்த புகாரின் பேரில் காலி மனையில் மாநகராட்சி ஊழியர்கள் துப்புரவு பணி மேற்கொண்டனர் . மீண்டும் இது போல் புகார் வந்தால் இது மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என இங்கு போர்டு வைக்கப்படும் என கூறியதால் சில மாதங்கள் அந்த இடத்தின் உரிமையாளர் மாநகராட்சிக்கு அபராத தொகை கட்டி விட்டு துப்புரவு பணி மேற்கொண்டார் . தற்போது மூன்று ஆண்டுகளாக இங்கு புதர் மண்டி பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடுகிறது .
இதுகுறித்து 57 வது வார்டு திமுக கவுன்சிலரும் திருச்சி மாநகர் மாவட்ட துணை செயலாளருமான முத்து செல்வத்திடம் கடந்த மாதம் 27ஆம் தேதி அன்று விவரம் கூறப்பட்டது . நான் மாநகராட்சி அதிகாரியிடம் கூறி நடவடிக்கை எடுக்கிறேன் என கூறினார் . மீண்டும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை .
பின்பு கவுன்சிலர் முத்து செல்வத்தை அவரது அலுவலகம் சென்று நேரில் சந்தித்து குறைகளை கூற முயன்ற போது அவரது விசுவாசி ஒருவர் கூறியது நம்மை அதிர்ச்சிக்குள் ஆக்கியது,ஆம் அவர் கூறியது …

தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கவுன்சிலர் அண்ணன் முத்து செல்வம் தான். திருச்சி மாமன்ற கூட்டத்தில் சக கட்சிக்காரர் என பார்க்காமல் மேயரிடம் தனது வார்டுக்காண பொதுமக்கள் தேவைகளை போராடி பெற்று தந்து வருபவர் கவுன்சிலர் முத்துச்செல்வம்.
திருச்சி மாநகரில் தீபாவளி, பொங்கல் என அனைத்து பண்டிகை காலங்களிலும் 57வது வார்டு பொதுமக்களுக்கு தனது சொந்த பணத்தில் இருந்து நலத்திட்ட உதவிகளை அள்ளித் தரும் ஒரே கவுன்சிலர் அண்ணன் முத்துச்செல்வம் மட்டும்தான் .
அமைச்சர் கே.என். நேருவின் குட்புக்கில் மட்டுமில்லாமல் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேருவின் குட்புக்கிலும் இடம்பெற்றவர் முத்துச்செல்வம்.
சமீபத்தில் முத்துச்செல்வம் வார்டில் ரூ.18.5 கோடி செலவில் நவீன மாநகராட்சி பள்ளிக்கூடம் திறப்பு விழா நடைபெற்றது . அப்பொழுது பேசிய அமைச்சர் கே என் நேரு முத்து செல்வம் மக்கள் பணி இன்றி கட்சி பணியும் சிறப்பாக ஆற்றி வருகிறார். அவருக்கு மிகப்பெரிய (மேயர்) பதவி வழங்க இருந்தோம் ஆனால் கால சூழ்நிலையால் வழங்க முடியாமல் போய்விட்டது . இனி முத்துச்செல்வம் உழைப்புக்கு ஏற்ற பயன் இருக்கும் என கூறினார் .
ஆம் மாமன்ற தேர்தலில் தொடர்ந்து பெற்று வெற்றி வருபவரும் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நபராக முத்து செல்வம் எங்கு தனக்கு எதிராக மேயராக அறிவிக்கப்பட்டு விடுவாரோ என்ற எண்ணத்தில் 57வது வார்டு பகுதியில் மாநகராட்சி சார்பில் எந்த ஒரு திட்டங்களும் நிறைவேற்ற விடாமல் தடுத்து வருகிறார் மேயர் அன்பழகன் என கூறினார் அந்த விசுவாசி.
கட்சிப் பணி , மக்கள் பணிதான் முக்கியம். திமுக கட்சி தலைவர் தளபதி. மற்றும் முதன்மைச் செயலாளர் கே என் நேரு கூறுவதை மட்டுமே தனது இலக்காக கொண்டு செயலாற்றி வருபவர் கவுன்சிலர் முத்து செல்வம் . 57வது வார்டில் எந்த பணியும் மேற்கொள்ளாமல் அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி மீண்டும் நாமே மேயர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகிறாரா மேயர் அன்பழகன் என கூட்டம் சாட்டியுள்ளார் அந்த முத்து செல்வத்தின் விசுவாசி .