ஸ்ரீரங்கத்தில்
முன்விரோதத்தில் வாலிபரை அரிவாளால் தாக்கிய 2 சிறுவர்கள் கைது .
திருச்சி ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் இவரது மகன் தீரன் (வயது 19) இவருக்கும் இரண்டு சிறுவர்களுக்கும் இடையே கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வாய் தகராறு ஏற்பட்டது இந்த நிலையில் ஸ்ரீரங்கம் பங்கஜம் காலனி வடக்கு தேவி தெரு பகுதியில் அந்த இரண்டு சிறுவர்களும் மோட்டார் சைக்கிள் வந்துள்ளனர் இதைப் பார்த்த தீரன் அவர்களிடம் எதற்காக என்னை கிண்டல் செய்து தகராறில் ஈடுபட்டீர்கள் என கேட்டுள்ளார். இதில் மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுவர்கள் அரிவாளால் தீரனை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர் இதில் அவரது தலை, கை ஆகிய இடங்களில் படுகாயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து தீரன் அளித்த புகாரின் அடிப்படையில் தப்பு ஓடிய அந்த இரண்டு சிறுவர்களும் கைது செய்யப்பட்டு காப்பகத்தில் அடைக்கப்பட்டுள்ளனர் .