திருச்சியில் இன்று வியாழக்கிழமை (05.06.2025) சாக்சீடு தொண்டு நிறுவனம் சார்பாக அகில உலக சுற்றுச் சூழல் தினம் பட்டார்வோர்த் ரோடு ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் Sr. அமலி தலைமையில் கொண்டாடப்பட்டது.
சாக்சீடு இயக்குனர் Sr. பரிமளா அவர்கள் மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கி இந்த நாளின் சிறப்பு பற்றியும் பேசினார். சி.சசி குடும்ப ஆலோசகர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சியில் டயஸ் ஜோசப். அருண் மற்றும் லாரன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பள்ளி மாணவிகள் உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் .