Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மறை மாவட்ட சொகுசு அறையில் இளம் பெண்ணுடன் தங்கியிருந்த அருட்தந்தை. கையும் களவுமாக சிக்கிய பரபரப்பு வீடியோ .

0

'- Advertisement -

தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் இல்ல வளாகத்தின் ஒரு பகுதியில் டி எம் எஸ் எஸ் எஸ் (TMSSS) என அழைக்கப்படும் தூத்துக்குடி மல்டி பர்ப்பஸ் சோசியல் சர்வீஸ் சொசைட்டி கட்டிடம் உள்ளது.

 

இந்த கட்டடத்தின் முதல் தளத்தில் அதன் அலுவலகமும், அதனருகில் செயலாளரும், இயக்குநருமான அமலனின் அலுவலக அறையும் அமைந்துள்ளது. இரண்டாவது தளத்தில் சில சொகுசு அறைகளும் உள்ளன. இதில் மறை மாவட்ட பங்குகளின் விருந்தினர்கள், திருச்சபை நிர்வாகிகள், பாதிரியார்கள் தங்கி செல்வது வழக்கமாம். அந்த வகையில், இரண்டாவது தளத்தில் உள்ள ஒரு அறையில் தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்ட தலைமை செயலாளரான ஜெகதீசன் தங்கியுள்ளார்.

 

இந்த நிலையில் இரண்டாவது தளத்தில் உள்ள ஜெகதீசன் அறைக்கு ரகசியமாக சில பெண்கள் அவ்வப்போது வந்து தங்கி செல்வதாக திருச்சபையை சேர்ந்த சிலரின் கவனத்திற்கு வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுகுறித்து பிஷப் ஸ்டீபனிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதனை ஏற்காத பிஷப் ஸ்டீபன், ஆதாரத்தோடு நிரூபியுங்கள்… சும்மா.. சும்மா வந்து புகார் தெரிவிக்காதீர்கள் என்று கூறிவிட்டாராம்.

 

இதனால் ஆதாரத்தோடு நிரூபிக்க வேண்டும் என்று அதற்கான தருணத்திற்காக திருச்சபையை சேர்ந்த மக்கள் காத்திருந்த போது, கடந்த 22 ஆம் தேதி ஜெகதீசன் அறையில் பெண் ஒருவர் தங்கியிருப்பதாக உறுதியான தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அவர்கள் அன்று இரவு 8.30 மணியளவில் செல்போனில் வீடியோ எடுத்தபடி அந்த அறையின் கதவை தட்டியுள்ளனர். பின்பு கதவு திறக்கப்பட்டவுடன் அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது ஜெயகதீசனுன் அறையில் பெண் ஒருவர் இருப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து யார் இந்த பெண் என்று அடுக்கடுக்கான கேள்விகளை அவர்கள் எழுப்பிய போது கத்தோலிக்க மறை மாவட்ட தலைமைச் செயலாளர் ஜெகதீசன் மலுப்பலாக பேசியிருக்கிறார். இதனை அவர்கள் வீடியோவாக பதிவு செய்து பிஷப் ஸ்டீபனிடம் கூறியுள்ளனர்.

 

அங்கு நடந்தவற்றை அவர்கள் கூறுகையில், “அன்னைக்கு ராத்திரி அந்த ரூமில் இருந்து கதவைத் திறந்து வெளியே வந்தவர் தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்ட தலைமை செயலாளரான ஜெகதீசன் தான். அவர், அங்கு வாசலில் நின்று கொண்டிருந்த எங்களை பார்த்ததும், இது சொந்தகார பொண்ணு. மதுரையில் இருந்து வந்திருக்கு. இந்த பெண்ணுக்கு கொஞ்சம் உடல்நிலை சரியில்லை. சிகிச்சைக்காக வந்து இங்கு தங்கி உள்ளார் என அவராகவே சம்பந்தம் சம்பந்தமில்லாமல் உளறினார். தலை நிறைய பூவுடன் அந்த ரூமில் இருந்து வெளியே வந்த அந்த இளம்பெண்ணோ, என்னை என்ன வேணாலும் சொல்லுங்க…. அவங்களை எதுவும் பண்ணாதீங்கன்னு கெஞ்சினார். பக்கத்து ரூமில் இருந்து பனியனுடன் வெளியே வந்த டி.எம்.எஸ்.எஸ்.எஸ் இயக்குநர் அமலன், எங்களை அங்கிருந்து நகர்த்துவதிலேயே குறியாக இருந்தார். எதுவாக இருந்தாலும் பேசிக்கொள்ளலாம் என கூலாக தெரிவித்தார். மறை மாவட்ட முதன்மை குரு ரவி பாலன் அங்கே வந்து இதை பிஷப் கவனத்துக்கு கொண்டு செல்வோம் என்றார்.இதனிடையே நாங்கள் ஜெகதீசனின் அறைக்குள் சென்று அனைத்தையும் வீடியோ பதிவு செய்தோம். அந்த வீடியோவை பார்த்தீங்கன்னா, அந்த ரூமில் அப்பெண்ணின் ஆடைகள், நைட் டிரஸ் ஆங்காங்கே அலங்கோலமாக கிடந்தன. வளையல், கம்மல் எல்லாம் ஒரு ஓரமா கழட்டி வைக்கப்பட்டிருந்தது. தேன் பாட்டில், ஆரஞ்சு பழங்கள், செவ்வாழை பழங்கள் என ஊட்டச்சத்தான சமாச்சாரங்கள் அங்கு இருந்தன. ஒரு பாதிரியார் ரூம் மாதிரியோ, சிகிச்சைக்கு வந்த பெண் தங்கி இருக்கும் ரூம் மாதிரியோ அது இல்லை. வேற லெவலில் இருந்தது. இதனிடையே இந்த தகவல் அறிந்து சென்ட்ரல் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து போலீஸ்காரங்களும் வந்துட்டாங்க. புகார் கொடுக்க நாங்க முடிவு செஞ்ச போது பிஷப்பிடம் பேசி நடவடிக்கை எடுப்போம்ன்னு சொன்னாங்க. நியாயம் கிடைக்கும்னு பிஷப் பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தோம். அதனால வந்த போலீசும் திரும்பி போய்ட்டாங்க.பின்னர் இந்த விவகாரம் தொடர்பா சனிக்கிழமை மாலை 4 மணியளவில் பிஷப் இல்லத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பிஷப் ஸ்டீபன், பொருளாளர் பிரதீப், மறை மாவட்ட முதன்மை குரு ரவிபாலன் மற்றும் இறை மக்கள் பிரதிநிதிகளும், போலீசும் கலந்துக்கிட்டாங்க. ஒரு விசாரணைக் குழு அமைத்து அந்த ரிப்போர்ட் அடிப்படையில் நடவடிக்கை எடுப்போம்ன்னு பிஷப் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Suresh

பாலியல் புகாருக்கு உள்ளான ஜெகதீஷை முதலில் பணி நீக்கம் செய்ய வேண்டும். அவர் அந்த பணியில் தொடர்ந்தால் ஆதாரங்களை அழிப்பதற்கு எல்லா விதமான துஷ்பிரயோகமும் செய்வார். அவர் அந்தப் பொறுப்பில் இருந்தால் விசாரணை குழு எப்படி நியாயமாக விசாரணை நடத்தும் என நாங்கள் இறை மக்கள் தரப்பில் கேட்டோம். ஆனால் பிஷப் தரப்போ கண்டு கொள்ளவில்லை. நீங்க சொல்லி, நாங்க கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்கிற ரீதியில் பதில் தெரிவித்தனர். வரும் 30ஆம் தேதி பிஷப் வெளிநாடு செல்கிறார். அடுத்த மாதம் ஜூன் 24 ஆம் தேதி தான் திரும்பி வருவார் என தகவல் உள்ளது. அதுக்கு பிறகு விசாரணை குழு அமைத்து விசாரணை நடத்துவது என்பது கபட நாடகம். பாலியல் குற்றச்சாட்டை மூடி மறைக்கும் செயல்” என்றனர்.

 

தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்டத்துக்கு நெருக்கமான முக்கியஸ்தர் ஒருவர் நம்மிடம் கூறுகையில், பாலியல் புகாருக்கு உள்ளாகியுள்ள பாதிரியார் ஜெகதீஷ், இடிந்த கரை, அடைக்கலாபுரம், ஏரல், குரூஸ்புரம் உள்ளிட்ட பல பங்குகளில் பணியாற்றியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அடைக்கலாபுரத்தில் ஆதரவற்றோர் காப்பகத்தில் இருந்த ஒரு இளம் பெண்ணை கர்ப்பம் ஆக்கிய குற்றச்சாட்டு எழுந்து அப்போதைய மறை மாவட்ட ஆயர் ஒருவர் மூலம் அந்த பெண்ணுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து செட்டில்மென்ட் செய்யப்பட்டதாக தான் இவருடைய ஹிஸ்ட்ரி உள்ளது. இப்போது அந்த ரூமில் கையும் களவுமாக சிக்கிய பெண் கூட, அந்த பெண் தான் எனவும், அப்பெண் இங்கே அடிக்கடி வந்து தங்கி செல்கிறார். உள்ளுக்குள்ள என்னென்னமோ நடக்குது. தூத்துக்குடி மறை மாவட்ட நிர்வாகிகள் எல்லாத்தையும் மூடி மறைக்க தான் பார்க்கிறாங்க..” என தெரிவித்தார்.

 

இளம் பெண்ணுடன் தங்கியிருந்ததை கையும் களவுமாக பிடித்து அந்த வீடியோ ஆதாரத்தை பிஷப்பிடம் காண்பித்த பிறகும் கூட சில பாதிரியார்களும், ஒரு சில சங்கத்தினரும் இந்த ஜெகதீஷ்க்கு ஆதரவாக பின்னணியில் இருந்து நடவடிக்கை எடுக்க விடாமல் செயல்படுகிறார்கள் என்று திருச்சபையை சேர்ந்தவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

 

இந்த வீடியோ விவகாரம் குறித்து விளக்கம் கேட்க பிஷப் ஹவுஸ் வளாகத்தில் உள்ள அமலனை நேரில் சந்தித்தோம். வீடியோ குறித்து கேட்ட போது, “அப்படியா… இந்த விஷயத்தை நான் கேள்விப்படலை. எனக்கு தெரியலை. இந்த கேம்பஸ்சில் எதுவா இருந்தாலும் பிஷப் தான் பதில் சொல்லனும். நீங்கள் பிஷப்பை சந்தித்து பேசுங்கள்..” என சுருக்கமாக முடித்து கொண்டார்.

 

பிஷப் ஸ்டீபனை சந்தித்து விளக்கம் கேட்க பிஷப் ஹவுஸ்க்கு சென்றோம். அங்கிருந்த ஊழியர் ஒருவர் பிஷப்பின் செகரெட்ரி ஜார்ஜ் என்பவர் மொபைல் நம்பரை கொடுத்து இவரிடம் பேசி அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிய பிறகு பிஷப்பை சந்திக்கலாம் என்றார். ஜார்ஜை தொடர்பு கொண்டு வீடியோ விஷயத்தை தெரிவித்து பிஷப்பிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்றோம். ‘பிஷப் அவங்க பிஸியா இருக்காங்க. நான் கேட்டுட்டு சொல்றேன்..’ என தெரிவித்தவர் அதன் பிறகு தொடர்பு கொள்ளவே இல்லை.

 

64 ஆயிரம் சதுர கி.மீ. மறை மாவட்ட பரப்பளவு, 119 பங்குகள், 307 கிளை பங்குகள், 247 பாதிரியார்கள் என பரந்து விரிந்து கிளை பரப்பியுள்ள தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்ட நிர்வாகத்தில் பிஷப் ஹவுஸ் அமைந்துள்ள வளாக பகுதியில் உள்ள ரூமிலேயே மறை மாவட்ட தலைமை நிர்வாகி இளம் பெண்ணுடன் சிக்கியிருக்கும் வீடியோ தூத்துக்குடியில் இப்போது ஹாட் டாப்பிக்காக உள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.