திருச்சி கோட்டை பகுதியில் மனைவி இறந்த தூக்கம் தாங்காமல் ஆட்டோ டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் .
திருச்சி கோட்டை பகுதியில்
மனைவி இறந்த தூக்கம் தாங்காமல் ஆட்டோ டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் .
உடலை மீட்டு கோட்டை காவல் நிலைய
போலீசார் விசாரணை.
திருச்சி இபி ரோடு வேதாத்திரி நகர் அந்தோணி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் விஜய் என்கிற டோரி விஜய் (வயது 28) ஆட்டோ டிரைவர்.
இவரது மனைவி கடந்த மாதம் 26 ம் தேதி மன அழுத்தம் காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்தார்.
இந்த நிலையில் விஜய் நேற்று யாரும் எதிர்பாராத விதமாக வீட்டில் மின்விசிறி கொக்கியில் மனைவி சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார்.
மனைவி இறந்த தூக்கம் தாங்காமல் தற்கொலை செய்து இருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது இது பற்றி அவரது தந்தை அந்தோணிசாமி அளித்த புகாரின் அடிப்படையில் கோட்டை போலீசார் விரைந்து சென்று விஜய்யின் உடலை மீட்டு திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மனைவி இறந்த தூக்கம் தாங்காமல் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.