Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது? ….

0

'- Advertisement -

திருச்சி, பஞ்சப்பூர்

புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது? –

 

மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் விளக்கம்.

 

திருச்சி, பஞ்சப்பூரில் ரூ. 408 கோடி மதிப்பில் கட்டப்பட்டு நேற்றைய தினம் தமிழக முதல்வரால் திறக்கப்பட்ட புதிய ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அடுத்த மாதம் (ஜூன்) முதல் பயன்பாட்டுக்கு வரும் என மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது :-

 

ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிந்து விட்டன. அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளுக்கு இடம், நேரம் ஒதுக்குதல் தொடர்பாக போக்குவரத்துத் துறை, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மாவட்ட நிர்வாகம் இணைந்து ஆலோசனை நடத்த வேண்டியுள்ளது. மேலும், பேருந்து முனையம் குறித்து அரசிதழில் வெளியிட வேண்டியுள்ளது. சில நிர்வாக காரணங்களுக்காக 15 நாட்களுக்கு மேல் தேவைப்படுகிறது. முனையம் செயல்பாட்டுக்கு வருவதற்கு 3 தினங்களுக்கு முன்பாக பொதுமக்களுக்கு முறைப்படி அறிவிப்பு வெளியிடப்படும் என கூறியுள்ளார்

 

இதனால், அடுத்த மாதம் (ஜூன்) முதல் வாரத்தில் புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.