Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட் மூலம் மலேசியா செல்ல முயன்ற, வந்த 2 பேர் கைது .

0

'- Advertisement -

திருச்சி விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட் வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Suresh

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை, இந்திரா நகரை சேர்ந்தவர் முகமது அன்சாரி (வயது 50) இவர் மலேசியா செல்ல திருச்சி விமான நிலையம் வந்தார். அங்கு இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் இவர் தந்தை பெயர், பிறந்த தேதியை மாற்றி கொடுத்து போலி பாஸ்போர்ட் பெற்றது தெரிந்தது.

 

இதேபோல் சிவகங்ககை மாவட்டம், காரைக்ககுடியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 56), இவர் மலேசியாவில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்தார். இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் தந்தை பெயர் மற்றும் பிறந்த தேதியை மாற்றி கொடுத்து போலி பாஸ்போர்ட் பெற்றது தெரிந்தது. இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் 2 பேரையும் ஏர்போர்ட் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.