Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கே.கே. நகரில் டாக்டர் வீட்டில் திருட முயற்சித்து ஏமாந்த திருடர்கள்.

0

'- Advertisement -

திருச்சி கே.கே. நகரில் டாக்டர் வீட்டில் திருட முயற்சித்து ஏமாந்த திருடர்கள்.

 

திருச்சி கே.கே. நகர் ஐயப்பன் நகரை சேர்ந்தவர் டாக்டர் ராதா ராணி,

இவர் கடந்த மூன்று மாத காலமாக அமெரிக்காவில் தங்கி உள்ளார். இதையடுத்து இவரது வீடு பூட்டப்பட்டு உள்ளது.

 

Suresh

இந்நிலையில் நேற்று மர்ம ஆசாமிகள் சிலர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பணம் மற்றும் நகை ஏதேனும் உள்ளதா என்று அலசி ஆராய்ந்தாக தெரிகிறது.இந்நிலையில் வீட்டில் நகை பணம் ஏதுமில்லாத காரணத்தால் திருடர்கள் ஏமாற்த்துடன் அங்கிருந்து சென்று விட்டனர்.

 

இன்று காலை வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக டாக்டர் ராதா ராணியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து உடனடியாக அவர்கள் கே.கே. நகர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்

 

பூட்டியிருந்த வீட்டுக்குள் பணம் நகை எதுவும் இல்லாத காரணத்தால் திருட முயற்சி நடந்துள்ளது என்று கேகே நகர் காவல் நிலைய போலீசார் தெரிவித்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.