திருச்சி மாநகரக் காவல்துறையில் 3 காவல் ஆய்வாளா்கள் உள்பட 284 போலீஸாா் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

திருச்சி மாநகர சைபா் க்ரைம் பிரிவு காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்த கே. சண்முகவேல், காந்தி சந்தை காவல்நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளராகவும், திருச்சி கோட்டை காவல்நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரான வி. நிா்மலா, சைபா் க்ரைம் பிரிவு பொறுப்பாளராகவும், முதன்மை நீதிமன்றக் காவல் ஆய்வாளரான ஆா். ரத்தினவள்ளி, கோட்டை காவல்நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
மேலும் மாநகரக் காவல்துறை எல்லைக்குள்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்கள், தலைமைக் காவலா்கள், காவலா்கள், பெண் தலைமைக் காவலா்கள், பெண் காவலா்கள் என 281 பேரும் வேறு காவல் நிலையம் மற்றும் வேறு பணியிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனா். இந்த மாறுதல் உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி நேற்று சனிக்கிழமை வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார் .