திருச்சி திமுக தெற்கு மாவட்டம் சார்பில் நீர்மோர் பந்தல் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார் .
திருச்சி திமுக தெற்கு மாவட்டம் சார்பில் நீர் மோர் பந்தல் தெற்கு மாவட்ட செயலாளர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வருமான மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார் .
தமிழக முதல்வரும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் படி, திருச்சி தெற்கு மாவட்டம், திருச்சி மாநகர திமுக சார்பாக தஞ்சை பால்பண்ணை பேருந்து நிறுத்தம் அருகில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில்.
மாநகர செயலாளர்
மு.மதிவாணன் ஏற்பாட்டில்
நீர் மோர் பந்தலை தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர், தர்பூசணி, இளநீர் வெள்ளரிப்பிஞ்சு மற்றும் குளிர்பானங்கள் ஆகியவைகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் , மாவட்ட மாநகர நிர்வாகிகள் , சேகரன், லீலாவேலு, செங்குட்டுவன், மூக்கன், சந்திரமோகன், பொன் செல்லையா, நூர்கான், தமிழ்ச்செல்வம், சரோஜினி மற்றும் பகுதி செயலாளர்கள் விஜயகுமார், நீலமேகம், கொட்டப்பட்டு தர்மராஜ், மோகன், பாபு, ராஜ்முகம்மது, மணிவேல், சிவக்குமார், மாநகர நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், வட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் .