திருச்சியில் நடந்த விபத்தில் கார் மோதி தொழிலாளி பரிதாப பலி.
போலீசார் விசாரணை

திருச்சி அரியமங்கலம் சொக்கலிங்கபுரம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 49). .
இவர் திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் செந்தண்ணீர்புரம் பஸ் நிறுத்தம் பகுதியில் சென்ற போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சுரேஷ் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார் .
இது குறித்து அவரது மனைவி கல்பனா கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி வடக்கு போக்குவரத்து பல்லாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.