தமிழக முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் 72 போட்டியாளர்கள் கலந்து கொண்ட கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநகர மாவட்ட செயலாளர் மதிவாணன் பரிசுகள் வழங்கினார்.
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில்
72 போட்டியாளர்கள் பங்கேற்ற பிரம்மாண்டமான கோலப்போட்டி.
வெற்றி பெற்றவர்களுக்கு மாநகர செயலாளர் மதிவாணன் பரிசுகள் வழங்கினார்.
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தலின் படி விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஜெகதீசன் மற்றும் மகளிர் தொண்டரணி அமைப்பாளர் கயல்விழி ஆகியோர் தலைமையில் விவசாய தொழிலாளர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில் காட்டூர்
எஸ் ஐ டி கல்லூரியில் தமிழக முதல்வரின் பிறந்த நாளை குறிக்கும் வகையில் 72 போட்டியாளர்கள் பங்கேற்ற பிரம்மாண்டமான கோலப்போட்டி நடைபெற்றது.
மாநகர மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ரம்யா பேகம் வரவேற்றார் .
மாநகர விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் கோவி. நாகராஜ்
நன்றி கூறினார்.
இந்த போட்டியில் 72 பெண்மணிகள் கலந்து கொண்டு,
தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்றும்,
இந்தியை எதிர்ப்போம் என்றும், தமிழ் எங்கள் மூச்சு என்றும் வாசகங்கள் எழுதி கோலங்கள் இட்டனர்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட
மாநகர செயலாளரும், திருச்சி மாநகராட்சி மண்டல குழு தலைவருமான மதிவாணன்
சிறப்பாக கோலமிட்ட மகளிருக்கு பரிசுகளை வழங்கினார் .
இந்நிகழ்வில் திருச்சி தெற்கு மாவட்ட பொருளாளர் குணசேகரன், மாவட்ட துணை செயலாளர் லீலா வேலு, அணிகளின் நிர்வாகிகள், வட்ட செயலாளர் உட்பட நிர்வாகிகள், தாய்மார்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.