Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தில்லை நகரில் கணவனோடு ஏற்பட்ட குடும்பத் தகராறில் இளம் பெண் தீ குளித்து தற்கொலை .

0

'- Advertisement -

திருச்சி தில்லை நகரில் கணவனுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில்

இளம் பெண் தீக்குளித்து தற்கொலை .

 

திருச்சி தென்னூர் அண்டா குண்டான் பகுதியை சேர்ந்தவர் சமீம்பானு (வயது 30. ) இவருடைய முதல் கணவர் சாதிக் அலி. கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

இதையடுத்து சமீம் பானு மனோஜ் குமார் என்பவரை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார்.

திருமணம் ஆனது முதல் கணவன்,மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

 

இந்நிலையில் கடந்த 2ந் தேதி கணவன், மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது .

இதனால் சமீம் பானு மன உளைச்சலில் விரக்தி அடைந்து உடம்பில் மண்ணெண்ணயை உடம்பில்

ஊற்றி தீயை பற்ற வைத்துக் கொண்டார். இந்த சம்பவத்தில் அவர் உடல் முழுவதும் தீ பரவி பலத்த காயம் அடைந்தார்.

இதையடுத்து சமீம்பானு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார்.

 

இந்நிலையில் நேற்று மாலை சமீம் பானு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் . இந்த சம்பவம் குறித்து தில்லைநகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.