மகா சிவராத்திரியை முன்னிட்டு
பத்மாவதி வெங்கடேஸ்வரர் திருக்கல்யாண வைபம்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு திருவானைக்காவலில்
பத்மாவதி வெங்கடேஸ்வரர்
திருக்கல்யாண வைபம் நேற்று நடைபெற்றது.

மகா சிவராத்திரியையொட்டி ஸ்ரீபகவன்நாம ப்ரசார சேவா மண்டலி சார்பில் திருவானைக்காவலில் 3 நாட்கள் ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முதல் நாளான 26-ந் தேதி மஹாகணபதி ஹோமம், திவ்யநாம சங்கீர்த்தனம், ஊஞ்சல் உற்சவம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
2ம் நாளான நேற்று முன்தினம் மீனாட்சி சுந்தரரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம், பாகவத ஆராதனை, சிவபூஜை உள்ளிட்டவை நடைபெற்றன.
3ம் நாளான நேற்று
பத்மாவதி வெங்கடேஸ்வரர் திருக்கல்யாண வைபவம்,
வசந்த கேளிக்கை, நந்திகேஸ்வரர், சண்டிகேஸ்வரர், ஆஞ்சநேயர் உற்சவம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிகளில் பக்தர்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.