Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் 30 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து தனியார் நிறுவன ஊழியர் பரிதாப பலி.

0

'- Advertisement -

திருச்சியில் 30 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து தனியார் நிறுவன ஊழியர் பரிதாப பலி.

போலீசார் விசாரணை.

திருச்சியில் தனியார் நிறுவன ஊழியர் 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லுார், நெ.1 டோல்கேடில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் திருமலை (வயது 46). திருச்சி தில்லைநகரில் உள்ள கணினி பழுதுநீக்கும் நிறுவனத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். நேற்று அந்நிறுவனத்தில் 30 அடி உயரத்தில் அமர்ந்து ஜன்னலை சுத்தம் செய்து கொண்டிருந்தார், அப்போது எதிர்பாராத விதமாக கால் தடுக்கி 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

 

இது குறித்து அவரது மனைவி விமலா லட்சுமி (வயது 46) அளித்த புகாரின் பேரில் உறையூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.