திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தை உணராமல் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரின் வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு கைகளை விட்டுவிட்டு பைக்கின் இருக்கை முனையில் அமர்ந்து, பொது மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில்
பயணம் செய்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
இதுபோன்ற ஆபத்தான சாகசங்களில் ஈடுபடும் நபர்கள் மீது திருச்சி முன்னாள் எஸ்பி வருண்குமார் அதிரடி நடவடிக்கை எடுத்து வந்ததின் பேரில் சமீப காலமாக பொது இடங்களில் இது போன்ற ஆபத்தான சாகசங்கள் செய்து ரீல்ஸ் வெளியிடுபவர்கள் பயந்து இருந்த நிலையில் தற்போது மீண்டும் இதுபோன்ற வீடியோ வெளியாகி உள்ளது .