திருச்சியில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி
ரூ.3.50 லட்சம் மோசடி செய்தவர் கைது.
சிவகங்கை மாவட்டம் படமாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார். இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 34) இவரிடம் திருவெறும்பூர் நொச்சி வயல் பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் அறிமுகமாகி வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய கிருஷ்ணவேணி
சம்பந்தப்பட்ட நபரின் வங்கி கணக்குக்கு ரூபாய் 3 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை செலுத்தி
உள்ளார்.குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு வெளிநாட்டில் வேலையும் வாங்கி தராமல் பணத்தை திருப்பி தராமல் சண்முகசுந்தரம் தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளார்.
இதையடுத்து
கிருஷ்ணவேணி உறையூர் குற்றப்பிரிவு காவல் நிலைய போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சண்முக சுந்தரத்தை கைது செய்துள்ளனர்.