Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

28ந் தேதி மணப்பாறையில் தொடங்கும் சாரண சாரணியர் இயக்க வைர விழா பணிகளை திருச்சி கலெக்டர் ஆய்வு .

0

'- Advertisement -

மணப்பாறையில் வருகிற 28.ந்தேதிமுதல் பிப் 3 ந்தேதி வரை நடைபெறும்
தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் ,இயக்க வைரவிழா
பணிகளை மாவட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் பார்வையிட்டார்.

பாரத சாரண சாரணியர் ,இயக்க, தேசிய தலைமையகத்தின் அனுமதியோடு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் வழிகாட்டுதலின் படி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனையின்படி திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் வருகின்ற 28. ந் தேதி முதல் பிப் 03ந் தேதி வரை பாரத சாரண சாரணியர் ,இயக்க வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பெருந்திரளணி மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.
இதற்காக பெருந்திரளணி சபை, திட்டக்குழு, தொழில் நுட்பக்குழு, செயல்பாட்டுக்குழு மற்றும் 33 துணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு இயக்குநர்களும் குழு ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Suresh

இவ்விழாவில், தினசரி நிகழ்வுகளாவும், போட்டிகளாகவும், சாரண சாரணிய திறன்கள், ஆக்கல்கலைத் திட்டம், ரங்கோலி, நாட்டுப்புற நடனம், திறன்வெளிப்பாடு, அணிகூட்டம், உலகளாவிய கிராமம், ,இளைஞர் மன்றம், உணவுத் திருவிழா, ஒருமைப்பாட்டு விளையாட்டு, பல்வண்ண ஒப்புனை பேரணி, வேடிக்கை செயல்பாடுகள், வீர தீர செயல்பாடுகள், அறிவுசார் செயல்பாடுகள்,
இரவு நடைபயணம், மிதிவண்டி பயணம், ராணுவம், விமானப்படை மற்றும் காவல்துறை சாகச நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.
இதற்காக ஏற்பட்டு வரும் பணிகளை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் ஆய்வு செய்தார்.

இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு தங்கள் கலாச்சாரம், பண்பாடு குறித்த செயல்பாடுகளை நிகழ்த்திக் காட்ட உள்ளனர். ,இந்த பெருந்திரளணி நிகழ்விற்காக மேடை அமைக்கும் பணிகள் அரங்கங்கள் அமைக்கும் பணிகள் கூடாரங்கள் அமைக்கும் பணிகள், மின்சார வசதி, குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள், மின் விளக்குகள், சமையற் கூடங்கள், முக்கிய பிரமுகர்களுக்கான அறைகள், மருத்துவமனை, மார்க்கெட் பகுதி, சாலை அமைப்பது, தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது மற்றும் அனைத்து பகுதிகளையும் கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது அதை கண்காணிப்பு செய்யும் இடம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது,

இப்பணிகளை இன்று மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை விரைவாகவும் தரமாகவும் மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.