திருச்சியில் கடன் தொல்லையால் ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை.
திருச்சி கே சாத்தனூர் கலிங்க நகர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா இவரது மகன் விஜய் (வயது 27) .இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். திருமணம் ஆகாதவர் .
இந்த நிலையில் சம்பவத்தன்று கருப்பையா மற்றும் அவரது மனைவி வேலைக்காக வெளியே சென்று இருந்தனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஜய் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலை முடிந்து வீட்டுக்கு வந்த அவரது தந்தை கருப்பையா, விஜய் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் உடனடியாக விஜயை மீட்டு கண்டோன்மென்ட் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.
இந்த சம்பவம் குறித்து கே.கே நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.
கேகே நகர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர் கடன் தொல்லையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர் .