திருச்சி அரியமங்கலத்தில் ஹோட்டல் அதிபரை மிரட்டி பணம், நகை பறித்த 3 ரவுடிகள் பயங்கர ஆயுதங்களுடன் கைது.
திருச்சி அரியமங்கலத்தில்
ஓட்டல் அதிபரிடம் பணம் பறிப்பு – பயங்கர ஆயுதங்களுடன் 3 ரவுடிகள் கைது.
ஆயுதங்கள், இரு சக்கர வாகனம், பணம் பறிமுதல்.
திருச்சி அரியமங்கலத்தில் ஓட்டல் அதிபரிடம் பணம் பறித்த மூன்று ரவுடிகள் பயங்கர ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி அரியமங்கலம் கணபதி நகர் 3 -வது தெருவை சேர்ந்தவர் திருமூர்த்தி .இவரது மகன் மாரிமுத்து (வயது 33). இவர் அப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று இவர் அரியமங்கலம் தொழிற்சாலை பகுதியில் நடந்த சென்று கொண்டிருந்தார். அப்போது விலை உயர்ந்த அதி நவீன பைக்கில் குடிபோதையில் வந்த மூன்று ரவுடிகள், இவரை மிரட்டி பணம், கையில் அணிந்திருந்த பிரேஸ்லெட் ஆகியவற்றை பறித்து சென்றனர்.
இதுகுறித்து மாரிமுத்து அரியமங்கலம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தார்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வரகனேரி ஆனந்தபுரம் மேட்டு தெருவை சேர்ந்த முகமது முபாரக் (வயது 32), அரியமங்கலம் மேல அம்பிகா புரத்தைச் சேர்ந்த லோகு என்கிற லோகநாதன் (வயது 31), அரியமங்கலம் மேல அம்பிகா புரத்தைச் சேர்ந்த தினேஷ் என்கிற கூல் தினேஷ் (வயது 26) ஆகிய மூன்று பேரை கைது செய்தார். அவர்களிடமிருந்து பெரிய வாள், கோடாரி, சில்லி பவுடர் ஸ்பிரே பாட்டில், ப்ரேஸ்லெட்,
அதி நவீன பைக், பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் இவர்கள் மூவரும் ரவுடி சரித்திர பட்டியலில் உள்ளவர்கள் என தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.