Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தம்பியை கத்தியால் தாக்கிய ரவுடி அண்ணன் கைது.

0

'- Advertisement -

 

திருச்சியில் தம்பியை கத்தியால் தாக்கிய ரவுடி அண்ணன் கைது.

திருச்சி சிந்தாமணி, பூசாரி தெருவைச் சேர்ந்தவர் சரோஜா (எ) கதிஜா (வயது 68), இவரது மூத்த மகன் பன்னாடை (எ) அக்பர்கான் (41). கடந்த 24ம் தேதி இவ்விருவருக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டது. இதில் கதிஜாவின் இளைய மகன் தாவூத்க்கான் தலையிட்டதால், அக்பர்கான் அவரை தன் சகோதரர் என்று கூட பாராமல் கத்தியால் கழுத்தில் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

இதில் காயமடைந்த தாவூத்கான் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து தாவூத்கானின் தாயார் கதிஜா அளித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிந்து பன்னாடை (எ) அக்பர்கானை பயங்கர ஆயுதங்கள் கொண்டு தன் சகோதரனை தாக்கியதாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் கைதான அக்பர்கான் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.