எம்ஜிஆரின் 37 வது நினைவு நாள் : அனைவரும் திரளாக பங்கேற்க அதிமுக திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் அழைப்பு .
திருச்சி மாநகர் மாவட்ட அஇஅதிமுக செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
அஇஅதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் முதல்வர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க…
அதிமுக அமைப்பு செயலாளர்,
நாமக்கல் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி அவர்களின் அறிவுறுத்தலின்படி
அஇஅதிமுக நிறுவனத் தலைவர், முன்னாள் தமிழக முதல்வருமான எம்.ஜி.ஆர் அவர்களின் 37- வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில்…
நாளை 24.12.2024, செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணி அளவில்..
திருச்சி நீதிமன்ற வளாகம் அருகே அமைந்துள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட உள்ளது..
அதுசமயம்
மாவட்ட அதிமுக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், வட்டக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தனகு அறிக்கையில் கூறியுள்ளார்.