Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: இருசக்கர வாகனம் மோதியதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலி. மனநலம் பாதிக்கப்பட்ட மகன் உட்பட இருவர் படுகாயம்.

0

'- Advertisement -

 

திருச்சியில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்தார். மனநலம் பாதிக்கப்பட்ட மகன் உட்பட இருவர் படுகாயம்.

திருச்சி தெற்கு காட்டு சீதாக்காதி தெருவை சேர்ந்தவர் சரோஜா ( வயது 76 ). அவரது மகன் சசிகுமார் (40) மனநலம் பாதிக்கப்பட்டவர். இருவரும் திங்கள்கிழமை இரவு காட்டூரில், திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றனர்.

அப்போது திருவெறும்பூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற இருசக்கர வாகனம் அவர்கள் மீது மோதியது. இதில் சரோஜா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அவரது மகன் சசிக்குமார், இருசக்கர வாகனத்தை ஒட்டி வந்த துறையூரை சேர்ந்த பிச்சை மகன் பிரகாஷ் (23) இருவரும் பலத்த காயமடைந்தனர்.
அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.