Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அரசு மருத்துவமனையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கைதி சாவு.

0

'- Advertisement -

 

திருச்சி அரசு மருத்துவமனையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கைதி சாவு.

அரியலுார் மாவட்டம் மீன்சுருட்டி மேல தெருவைச் சேர்ந்தவர் கருணாகரன் (வயது54). இவர் மயிலாடுதுறை, அணைக்கரை சத்திரத்தில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் கடந்த ஏப்.25ந்தேதி முதல் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் நவ.29ந்தேதி இவர் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து திருச்சி மத்திய சிறை அதிகாரி ஷர்மிளா அளித்த புகாரின் பேரில் திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.