Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு திருச்சியில் 65 வார்டுகளிலும் பகுதி சபா கூட்டம் .27வது வார்டில் மேயர் தலைமையில் நடைபெற்றது .

0

'- Advertisement -

 

மனித உரிமைகள் தினமான இன்று
திருச்சி
மாநகராட்சியின்
65 வார்டுகளிலும் பகுதி சபா கூட்டம்

திரளான மக்கள். பங்கேற்பு.

திருச்சி மாநகராட்சியின் 5 வது மண்ட லத்துக்குட்பட்ட 27 வது வார்டு சங்கீதாபுரம் ஆரோக்கிய அன்னை ஆலயம் பகுதியில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்துக்கு மேயர் மு.அன்பழகன் தலைமை வகித்து , பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

இக்கூட்டத்தில் , சங்கீதபுரம் , ஆட்டுமந்தை தெரு , சவேரியார் கோவில் தெரு , மீன்கார தெரு , மல்லிகைபுரம் , ஜெனரல் பஜார் , வண்ணாரப்பேட்டை பெருமாள் கோவில் தெரு ,ஜெனரல் பஜார், பென்சினர்,விஷப்பன் நாயக்கன் பேட்டை, ரெங்கநாதபுரம் தெரு, மூலைக் கொல்லை, தென்னூர், தெருபட்டாபிராமன் பிள்ளை தெரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பல் வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை மேயரிடம் அளித்தனர் .

பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என மேயர் தெரிவித்தார் .
முன்னதாக மேயர் மு. அன்பழகன் 27 வது வார்டு பகுதிகளுக்கு முடிவுற்ற திட்ட பணிகளையும், நலத்திட்டங்களையும் மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திட்ட பணிகளையும் பொதுமக்களிடம் விளக்கமாக எடுத்துரைத்தார்.

திருச்சி மாநகராட்சி 65 வார்டு பகுதிகளிலும் துணை மேயர் திவ்யா, மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், நகரப் பொறியாளர், செயற்பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், நிர்வாக அலுவலர்கள், உதவி வருவாய் அலுவலர்கள் ஆகியோர் முன்னிலையில் அந்தந்த வார்டுக்கு உட்பட்ட பகுதி சபா கூட்டம் நடைபெற்று பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை இன்று பெற்றனர். தகுதியுள்ள மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்கள்.

முன்னதாக திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் மனித உரிமைகள் தின உறுதி மொழியை மேயர் மு. அன்பழகன் தலைமையில், ஆணையர் சரவணன் துணை ஆணையர் .பாலு, மாநகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் எடுத்துக் கொண்டார்கள்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.