Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி 17 வயது காதலன் வீட்டில் குடும்பம் நடத்தி வந்த 17 வயது காதலி மர்மமான முறையில் உயிரிழப்பு.

0

 

மண்ணச்சநல்லூர் அருகே காதலன் வீட்டில் சிறுமி மர்மமான முறையில் உயிரிழப்பு. மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தாய் அளித்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்துள்ள திருவரங்கபட்டி சேர்ந்த ராமசந்திரன்- வித்யா. இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு முறையாக விவாகரத்து பெற்று வித்யா தனியாக வசித்து வருகிறார். இந்த தம்பதியின் மகள் கோபிகா (வயது 17). பனிரெண்டாம் வகுப்பு முடித்துள்ளார்.

திருப்பைஞ்ஞீலீ அடுத்துள்ள மூவராயன் பாளையம் மேலூர் கிராமத்தை சேர்ந்த வரதராஜ் – தனலெட்சுமி வடக்கு சித்தாம்பூர் பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகின்றனர். இந்த தம்பதியின் மகன் நவீன் (17). இவர் பனிரெண்டாம் வகுப்பு முடித்துள்ளார்.
இந்நிலையில் கோபிகா மற்றும் நவீன் இருவரும் மண்ணச்சநல்லூரில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பில் இருந்து காதலித்து வந்துள்ளனர். மேலும் பனிரெண்டாம் வகுப்பை முடித்தவுடன் நவீன் கோபிகாவை அழைத்து கொண்டு பல இடங்களில் சுற்றி திரிந்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர் .

கோபிகாவும் நவீன் வீட்டிற்கு அடிக்கடி சென்று உல்லாசமாக இருந்து இருந்து வந்துள்ளார்.

இந்நிலையால் கடந்த ஜூலை மாதம் கோபிகாவின் தாயார் வித்யா இருவரையும் நேரில் அழைத்து கண்டித்துள்ளார்.
அப்போது கோபிகா தனது தாயாரிடம் எங்களை பிரிக்க நிலைத்தால் நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டி உள்ளார்.
இதையடுத்து கோபிகா தாயாருடன் வாக்குவாதம் செய்து காதலன் நவீனுடன் அவரது வீட்டிற்கு சென்றுவிட்டார்.
பின்னர் தன்னை நாடி வந்த காதலிகாக நவீன் ஶ்ரீரங்கம் பூ மார்கேட்டில் மாலை கட்டும் வேலைக்கு சேர்ந்து வேலை செய்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் மூன்று மாதம் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்த நிலையில் இன்று நவீன்

 

தீபாவளி பண்டிகைகாக ஆடை எடுக்க திருச்சிக்கு சென்றுவிட நவீனின் பாட்டி வயல் வேலைக்கு சென்று மீண்டும் வீட்டிற்கு வந்த பாட்டி கதவை திறந்தபோது மர்மமான முறையில் சிறுமி வீட்டின் உள்ள மின் விசிறியில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியவாறு சடலமாக இருந்துள்ளார்.

இதையடுத்து பாட்டி கத்தி கூச்சலிட்டு அழுதபோத அக்கம்பக்கத்தினர் வந்து தூக்கில் தொங்கியவாறு சடலமாக இருந்த கோபிகாவை மீட்டனர்.
மேலூம் இச்சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்து வந்த மண்ணச்சநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரி மற்றும் காவலர்கள் கோபிகாவின் உடலை கைப்பற்றி ஶ்ரீரங்கம் அரசு மருத்துவ மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைகாக அனுப்பிவைத்தனர்.
பின்னர் அப்பகுதியில் கோபிகாவின் மரணம் குறித்து தற்கொலையா அல்லது கொலையா என மண்ணச்சநல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் இன்று மதியம் மகள் இறந்த தகவல் அறிந்த வித்யா கோபிகாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்றும், நேற்று இரவு மகள் கோபிகா தன்னிடம் தொலைபேசியில் பேசியதாகவும் அப்போது அவர் தனக்கு உடம்பெல்லாம் எரிகிறது உடல் சோர்வாக இருக்கிறது என்று கூறி அழுததாக கூறினார். இதனால் தனது மகளை அடித்து துன்புறுத்தி இருக்கலாம் என்றும் இதனால் தனது மகளிர் இறப்பின் உண்மையை உடனே கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மண்ணச்சநல்லூர் காவல்நிலையத்தில் காவலர்களுடன் உறவினர்களுடன் சூழ்ந்து கொண்டு வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து போலீசார் சிறுமியின் தாயார் வித்யா மற்றும் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் வித்யா தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அளித்த புகாரின் அடிப்படையில் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து காவ‌ல்துறை‌யின‌ர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் பர பரப்பாக காணப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.