திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் மாயம் .
திருவரங்கம் தாயனூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி மோகனப்பிரியா (வயது 19 )காதல் திருமணம் செய்தவர்.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட இவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் அங்கிருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை.
இதுகுறித்து அவரது உறவினர் குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மோகனப்பிரியாவை தேடி வருகின்றனர்.