Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அனைவரும் திரண்டு வாரீர் . வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி அழைப்பு

0

 

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாளை 19.9.2024, வியாழக்கிழமை அன்று முசிறி MIT வேளாண்மை கல்லூரி விழாவிற்கு வருகை தரும் அஇஅதிமுக பொதுச்செயலாளர், எடப்பாடி பழனிச்சாமிக்கு காலை 9.30மணி அளவில் ஏலூர்பட்டியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

அதுசமயம் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் மற்றும் மகளிரணியினர் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

என மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.