Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரியில் 7-வது ஆண்டாக ஊட்டசத்து கண்காட்சி நடைபெற்றது .

0

 

தேசிய ஊட்டச்சத்து வாரத்தை முன்னிட்டு திருச்சி ஶ்ரீமத் ஆண்டவன் கல்லூரியில் நடைபெற்ற ஊட்டச்சத்து கண்காட்சியில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு.

ஊட்டச்சத்து விழிப்புணர்வு இந்தியாவில் பொது சுகாதாரத்தின் அடிப்படை அங்கமாகும். இருப்பினும், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை தெரிவுகள் அதிகரித்து வருவதால், இளைய தலைமுறையினரிடையே ஊட்டச்சத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் அதிகரித்து வருகிறது. ஒருபுறம் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகமாக உள்ளது. மறுபுறம் உடல் பருமன், நீரிழிவு மற்றும் இதய நோய்கள் போன்ற உணவு தொடர்பான நோய்களின் தொற்று அதிகரித்து வருகிறது.

இந்த சவால்களை எதிர்கொள்வதில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு முக்கிய பங்கு வகிக்கிறது. இதை சிறப்பிக்கும் வகையில் இந்தியாவில் தேசிய ஊட்டச்சத்து வாரம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1 முதல் 7 வரை கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் இளைஞர்களிடையே ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்
திருச்சி ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் (தன்னாட்சி) உயிர்வேதியியல் துறை சார்பில், ஏழாவது வருடமாக “ஆரோக்ய போஜன் 2024” என்ற தலைப்பிலான ஊட்டச்சத்து கண்காட்சி
கல்லூரி வளாகத்தில் உள்ள வராஹ மகாதேசிகன் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இக்கண்காட்சியை கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளர் வெங்கடேஷ், முதல்வர் முனைவர் பிச்சைமணி, சீனியர் துணை முதல்வர் முனைவர் ஜோதி, துணை முதல்வர்கள் முனைவர் கிருஷ்ணன் மற்றும் முனைவர் உபேந்திரன், புல முதன்மையர் (உயிர் அறிவியல்) முனைவர் ஸ்ரீதரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இதில் முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் அருகில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, உயிர்வேதியியல் மாணவர்கள் தயாரித்த மாதிரிகள் மற்றும் விளக்கப்படங்களை பார்வையிட்டனர்.

மேலும் இந்நிகழ்வில் கல்லூரியின் செய்தி மக்கள் தொடர்பாளர் மோகன் , ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.