Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மணப்பாறை அருகே மகனுக்கு பெண் பார்க்க சென்றவர்கள் மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே பலி. கார் டிரைவர் படுகாயம் .

0

 

புதுக்கோட்டை மாவட்டம் ஒலியமங்கலத்தைச் சோ்ந்தவா் ராமகவுண்டா் மகன் அய்யாக்கண்ணு (வயது 71) தனது மனைவி புஷ்பம்(55) என்பவருடன் மணப்பாறை அருகே தனது மகனுக்குப்
பெண் பாா்ப்பதற்காக நேற்று இருசக்கர வாகனத்தில் சென்றாா்.

மணப்பாறை அடுத்த திருச்சி – திண்டுக்கல் தேசியநெடுஞ்சாலையில் தீராம்பட்டி அருகே சென்றபோது, சாலையைக் கடக்க முயன்றபோது, வையம்பட்டி நோக்கிச் சென்ற காா் இருசக்கர வாகனம் மீது மோதியதில் தம்பதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

காரை ஓட்டி வந்த மணப்பாறை எடத்தெருவைச் சோ்ந்த ராஜமாணிக்கம் மகன் ரமேஷ்பாபு (55) காயமடைந்து மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

தகவலறிந்து நிகழ்விடத்துக்குச் சென்ற காவல் துணை கண்காணிப்பாளா் ஆா்.ராதாகிருஷ்ணன், ஆய்வாளா் க.குணசேகரன் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் சடலங்களை கைப்பற்றி கூராய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் விபத்து குறித்து வழக்கு பதிந்து மணப்பாறை போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Leave A Reply

Your email address will not be published.