விஸ்வகர்மா சமூக அமைப்பான விஜிசியின் மாநில பொதுகுழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
விஸ்வகர்மா சமூகத்தின் சேவை அமைப்பான விஸ்வகர்மா குளோபல் கனெக்ட் (VGC) சொசைட்டியின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் விஜிசியின் நிறுவனர் பிரம்மஸ்ரீ வேல்முருகன் ஆச்சாரியின் தலைமையில் திருச்சி வயலூரில் எம்.ஏ.பாரடைஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
விஜிசியின் மாநில பொதுசெயலாளர் பிரம்மஸ்ரீ மாஸ்டர் எம்.ஆர்.குமரேசன் ஆச்சாரியார் முன்னிலை வகித்தார்.மாநில செயலாளர் பிரம்மஸ்ரீ ராஜா ஆச்சாரி வரவேற்புரை ஆற்றினார். விஜிசியின் மாநில தலைவர் மருத்துவர் பிரம்மஸ்ரீ கனகராஜ் ஆச்சாரியார் சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கார்வ்டெக் நிறுவனர் பிரம்மஸ்ரீ வின்செண்ட் இருதயராஜ் நவீன தொழில்நுட்ப கருவிகளின் பலன்களை பற்றி விளக்கம் அளித்தார்.
மாநில செயலாளர்கள் பிரம்மஸ்ரீ ஏழுமலை ஆச்சாரி,பிரம்மஸ்ரீ செந்தில் ஆச்சாரி .மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பிரம்மஸ்ரீ கணேசன் ஆச்சாரி மற்றும் திருச்சி மாவட்ட தலைவர் பிரம்மஸ்ரீ கோபாலகிருஷ்ணன் ஆச்சாரி,மாவட்ட செயலாளர் பிரம்மஸ்ரீ சக்திவேல் ஆச்சாரி,மாவட்ட பொருளாளர் பிரம்மஸ்ரீ கோவிந்தராஜன் ஆச்சாரி மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
கூட்டமுடிவில் திருச்சி மாவட்ட தலைவர் பிரம்மஸ்ரீ கோபாலகிருஷ்ணன் ஆச்சாரி நன்றியுரை நிகழ்த்தினார்.
இக்கூட்டத்தில் விஸ்வகர்மா சமூக முன்னேற்றத்திற்காக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.