திருச்சி அதிமுக ஏர்போர்ட் பகுதி நிர்வாகிகளுக்கு மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் அடையாள அட்டை வழங்கப்பட்டது .
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க திருச்சி ஏர்போர்ட் பகுதி நிர்வாகிகளுக்கு இன்று அடையாள அட்டை வழங்கப்பட்டது .
திருச்சி ஏர்போர்ட் பகுதிக்கு உட்பட்ட 35,35 ஏ,38,38 ஏ வார்டு நிர்வாகிகளுக்கு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் என்று உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது .
இந்நிகழ்ச்சிக்கு ஏர்போர்ட் பகுதி செயலாளர் ஏர்போர்ட் விஜி முன்னிலை வகித்தார்.
வட்ட செயலாளர்கள், அணி செயலாளர்கள் , மற்றும் ஏராளமான நிர்வாகிகள் நிகழ்வில் கலந்து கொண்டனர்