Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பஸ் நிறுத்தத்தில் செவிலியரின் 9 பவுன் நகைகள் அபேஸ்.

0

திருச்சி கே,கே.நகர் புவனேஸ்வரி நகரை சேர்ந்தவர் கர்ணன். இவரது மனைவி கவிதா (வயது 48). இவர் திருச்சி ரயில்வே மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார் .

நேற்று இவர் திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் பஸ் நிறுத்தத்தில் சேலம் புதிய பஸ் நிலையம் செல்வதற்காக பஸ் ஏற காத்துக் கொண்டிருந்தார். அப்போது தனியார் பஸ்ஸில் ஏற முயன்ற போது இவரது பேக்கில் இருந்த 3 சவரன் தங்கச் செயின் ஒன்று, 4 சவரன் தங்க வளையல் ஒன்று, இரண்டு சவரன் கம்மல்கள் ஒரு ஜோடி ஆகியவை என மொத்தம் 9 சவரன் தங்க நகைகள் திருட்டு போனது. இதை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்று விட்டதாக செவிலியர் கவிதா கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பெயரில் சப்-இன்ஸ்பெக்டர் கிரேசி தமிழ்ச்செல்வி வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.